prabanjathugal.com

Unmaikku anmaiyil..

அருணாச்சலேஸ்வரர் மகிமைகள்

திருவண்ணாமலையில் திவ்யமாக காட்சி தரும் ஜோதி வடிவான இறைவனின் மகிமைகளை அத்தனை எளிதில் எடுத்துரைக்க முடியாது . தன்னுடைய லட்சகணக்கான பக்தர்களை எந்த வேறுபாடும் காட்டாமல் ஏற்றுக்கொள்ளும் ஒரே இறைவன் நம் சிவபெருமான் ஒருவரே. திருவண்ணாமலைக்கு வரும் அன்பர்களின் வாழ்வில் திருப்பங்கள் உண்டாகும் என்பது சத்தியம். இறைவன் நம் பாவங்களை தீர்க்க கிரிவலம் எனும் முறையை உண்டாக்கினார். இந்திரன் முதல் தேவாதி தேவர்கள் அனைவரும் இங்கே வந்து கிரிவலம் செய்து தங்கள் பாவங்களை போக்கி விமோசனம் பெற்றிருக்கும்.